Also Watch
Read this
By: Web Team

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தாய்ப்பால் அருந்தும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு 8 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆவடைத்தங்கம் நாடார் தெருவை சேர்ந்த விநாயக் - கண்மணி தம்பதிக்கு, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சென்னையில் பெண் குழந்தை பிறந்தது.
அந்தக் குழந்தை உசிலம்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு, குடும்பத்தினர் பராமரிப்பில் இருந்து வந்தது. இந்த சூழலில், குழந்தை தாய்ப்பால் அருந்தும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு திடீரென மயங்கியுள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த தாய் கண்மணி மற்றும் உறவினர்கள் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இதையும் படியுங்கள் : அரசு நிகழ்ச்சியில் பங்கேற்காத பேரூராட்சி பெண் அலுவலர்..!