Also Watch
Read this
By: Web Team

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, மூலச்சல் பகுதியை சேர்ந்த அகஸ்டின், தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 6 பேருடன் ஹூண்டாய் காரில் முட்டம் கடற்கரைக்கு சென்றுவிட்டு திரும்பினார். காரை அவரது மனைவி தங்கஷைலஜா ஓட்டிச் செல்ல, நாகர்கோவில் குளச்சல் மேற்கு கடற்கரை சாலை மண்டைக்காடு பகுதியில் சென்றபோது காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. உடனே அவசரமாக காரை நிறுத்தி அனைவரும் கீழே இறங்கிய நிலையில், கார் மளமளவென தீப்பற்றி எரிந்து முற்றிலுமாக சேதமானது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved