Also Watch
Read this
By: Web Team

ரஷ்ய ராணுவத்தில் கட்டாயமாக சேர்க்கப்பட்டு, உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படும் தமிழக மாணவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை வைத்துள்ளார்.
மருத்துவப் படிப்புக்காக ரஷ்யா சென்ற கீழ்பாதி பகுதியை சேர்ந்த கிஷோர், மற்றொரு மாணவர் நித்தீஷ் ஆகியோர் தடை செய்யப்பட்ட பொருளை விநியோகம் செய்ததாக கைதாகி சிறையில் உள்ளனர்.
இந்நிலையில் தங்களை உக்ரைன் போரில் ஈடுபடுத்த உள்ளதாக கிஷோர் பெற்றோருக்கு அனுப்பிய செய்தி பதட்டத்தை ஏற்படுத்துவதாக கூறியுள்ள அன்புமணி, சிக்கலில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved