Also Watch
Read this
By: Web Team

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மனைவியின் வளைக்காப்பு நிகழ்ச்சிக்காக இருசக்கர வாகனத்தில் சென்ற கணவர், சாலையை கடக்க முயன்ற போது கார் மோதி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியது.
நெல்லை மாவட்டம் மானூரை சேர்ந்த சந்தனமாரி என்பவர், தனது மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக மூ.கோட்டூர் பகுதியில் உள்ள மாமனார் வீட்டிற்கு இருசக்கரவாகனத்தில் சென்றுள்ளார்.
அங்கு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது, அந்த வழியாக சென்ற கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில், சுமார் 20 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.