Also Watch
Read this
By: Web Team

சென்னை பெரும்பாக்கம் காவல் நிலையம் புதிதாக திறந்து இரண்டு மாதம் கூட முடிவடையாத நிலையில், காவல் நிலைய வளாகத்தில் விநாயகர் கோவில் கட்டும் பணிகள் நடைபெற்று வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை 31ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பெரும்பாக்கம் காவல் நிலையத்தை திறந்து வைத்தார். காவல் நிலைய வளாகத்துக்குள் ஒரு மதத்தை சார்ந்த கடவுளின் கோவில் கட்டும் பணி நடைபெறுவது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.