Also Watch
Read this
By: Web Team

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி விழுந்த விவகாரம் தொடர்பாக சமையலர் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ஆணைவாரி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி விழுந்து இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.
இதனை சாப்பிட்ட மாணவ-மாணவிகள் 50 க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து அங்கு சென்ற மருத்துவ குழுவினர், மாணவ, மாணவிகளை பரிசோதனை செய்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.