Also Watch
Read this
By: Manigandan Raja

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே மாயார் குடியிருப்பு பகுதிக்குள் நேற்று இரவு நாயை விரட்டி வீட்டிற்குள் சென்ற சிறுத்தை. சிறுத்தையை வீட்டுக்குள் வைத்து பூட்டிய உரிமையாளர்
மசினகுடி அருகே மாயார் செல்வப்பா காலனி குடியிருப்பு பகுதியில் உள்ள சிவக்குமார் என்பவரது வீட்டிற்குள் நாயை வேட்டையாட வீட்டிற்குள் சென்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது.
கூண்டில் சிக்கிய சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து வனத்துறையினர் முதுமலை சீகூர் அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். நேற்று இரவு சுமார் 10 மணியளவில் மாயார் கிராமத்திற்குள் உலா வந்த சிறுத்தை நாயை வேட்டையாட வீட்டிற்குள் நுழைந்தது . இதனால் அதிர்ச்சடைந்த வீட்டின் உரிமையாளர் கதவை அடைத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
வீட்டிற்குள் அடைக்கப்பட்ட சிறுத்தை ஆக்ரோஷமாக இருந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க முயற்சிகள் மேற்கொண்டனர் .
சுமார் ஆறு மணி நேரத்திற்கு பின்பு அதிகாலை 3 மணியளவில் வீட்டிற்குள் இருந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது .
கூண்டிற்குள் சிக்கிய சிறுத்தை முதுமலை அடர்ந்த சீகூர் அடர் வனப்பகுதியில் விடப்பட்டது. சிறுத்தைக் கூண்டிற்குள் சிக்கியதால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர் .