Also Watch
Read this
By: Manigandan Raja

தள்ளுமுள்ளு :
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் பொது மக்களுக்கு முதல் நாளே 5கிலோ அரிசி பையை பெறுவதற்கான டோக்கன் வழங்கப்பட்டுள்ளது இந்த நிலையில் அரிசிப்பையை பெறுவதற்காக பொதுமக்கள் முண்டியடித்து சென்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது இந்த கூட்ட நெரிசலில் ஒரு பெண்மணி கீழே விழுந்து நிலையில் அரிசி பையை பெற்று சென்றனர்.
அரிசி பையை பெறுவதற்காக டோக்கன் வைத்திருப்பவர்களும் டோக்கன் அல்லாதவர்களும் போட்டி போட்டுக் கொண்டு அரிசிப்பையை வாங்க முற்பட்டபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில் டோக்கன் வழங்கப்பட்ட பலருக்கும் அரிசி பை கிடைக்காமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.