Also Watch
Read this
By: Web Team

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மாலையில் சூரியன் மறையும் வேளையின் போது, செந்நிறத்தில் வானம் தோன்றிய காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மாலை வேளையில் சிறிது நேரம் லேசான மழை பெய்த நிலையில், அந்தி சாயும் நேரத்தில் வானம் வழக்கத்தை விட செக்கச் செவந்த வானமாக காட்சியளித்தது.
மேலும், அங்கும் இங்குமாக அலைந்து திரிந்த மேக கூட்டங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் தோன்றிய காட்சி சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்து படைத்தன.