news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கல் குவாரியை மூடக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்
tv

Also Watch

tv

Read this

கல் குவாரியை மூடக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

சிவகங்கை

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
protest

சிங்கம்புணரி அருகே இயங்கி வரும் கல்குவாரியை நிரந்தரமாக மூட வேண்டி, 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மாம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட தும்பைபட்டியில் 20க்கும் மேற்பட்ட கிராம பொது மக்கள், இப்பகுதிகளில் இயங்கி வரும் கல்குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி, 2ஆவது முறையாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் ஆறுக்கும் மேற்பட்டோர் இறந்த நிலையில், மற்றொரு கல்குவாரிக்கு அனுமதி அளித்துள்ளதாக, கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். சிங்கம்புணரி வட்டாட்சியர் நாகநாதன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது, கல்குவாரிக்கான அனுமதி உரிமத்தை ரத்து செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் வலியுறுத்தினர்.

காலை முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கிராம பொது மக்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நிரந்தர தீர்வு கிடைகாத பட்சத்தில், தொடர் போராட்டம் நடைபெறும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத்துக்கு ரூ.18,778 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்

2
17 hrs 32 mins agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved