Also Watch
Read this
By: Web Team

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில், சாமந்தி பூக்கள் அமோக விளைச்சல் கண்டுள்ளது.
தசரா பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், வேப்பனப்பள்ளி பகுதிகளில், சாமந்தி பூக்கள் விளைச்சலில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில், தற்போது
வேப்பனப்பள்ளி சுற்று வட்டார கிராம பகுதியில் சாமந்திப்பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ளது.
ஒரு கிலோ சாமந்தி ரூ.150 முதல் ரூ.200 வரை விலை உயர்ந்துள்ளது.

தசரா பண்டிகைக்கு சாமந்தி பூக்களின் விலை ஒரு கிலோ 300 ரூபாய் முதல் 350 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இதனால் இப்பகுதியில் சாமந்தி பூக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், பூக்கள் சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.