Also Watch
Read this
By: Web Team

வேலூரில் கடைகள் ஒதுக்குவது தொடர்பாக மாநகராட்சி உதவி ஆணையரை முற்றுகையிட்டு வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பழைய மீன் மார்க்கெட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான 150 திறந்தவெளி மேடை கடைகள் உள்ளன.
இந்த கடைகளை வியாபாரிகளுக்கு ஒதுக்குவது தொடர்பாக அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது,குலுக்கல் முறையில் ஒதுக்க கோரி ஒரு தரப்பு வியாபாரிகளும், முன்னுரிமை அடிப்படையில் கடைகளை ஒதுக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.