Also Watch
Read this
By: Web Team

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே முன்னால் சென்ற தனியார் பேருந்து திடீரென நின்றதால் பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
மதுரையில் இருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு பழனிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து, விருப்பாச்சி பேருந்து நிறுத்தத்திற்கு அருகே மற்றொரு பேருந்து மீது மோதியதில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்து காரணமாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், சத்திரப்பட்டி போலீசார் விபத்தில் சிக்கிய பேருந்துகளை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்,