Also Watch
Read this
By: Web Team

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற தனியார் பேருந்தை, இருசக்கர வாகனத்தில் சென்று வழிமறித்து நிறுத்திய இளைஞரை பேருந்து ஓட்டுநர் சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
கோயம்புத்தூரில் இருந்து வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து கருமத்தம்பட்டி நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால், அங்கு காத்திருந்தவர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் ஓட்டுநரை தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஓட்டுநர் அவரை அடித்த நிலையில், இருதரப்பினரும் அளித்த புகார் குறித்து அவிநாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.