Also Watch
Read this
By: Web Team

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரளிக்கோட்டை கிராமத்தில் உள்ள அரளி கண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்று ஆர்வத்துடன் மீன் பிடித்தனர்.
தாமரைப் பூக்கள் நிரம்பி, சேறும் சகதியுமாக இருந்த கண்மாயில் ஊத்தா, கச்சா, கொசுவலை, மீன்படி வலை, அரிகூடை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு சிரமத்துடன் மீன்பிடித்த மக்கள், ஜிலேபி, குரவை, விரால் உள்ளிட்ட பலவகை மீன்களை பிடித்து சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved