Also Watch
Read this
By: Web Team

உலக இதய தினத்தை முன்னிட்டு, புதுக்கோட்டையில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் இணைந்து, இதயத்தை காப்போம் என்பதை வலியுறுத்தி வாக்கத்தான் பேரணி நடைபெற்றது.
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் துவங்கிய இந்த பேரணியை, மாவட்ட ஆட்சியர் அருணா, கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

பழைய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக நகர்மன்றம் வந்தடைந்தது. இந்த பேரணியில், இதயத்தை காப்போம், மனித உயிர்களை காப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி, கோஷமிட்டவாறு, மாணவ மாணவிகள் வாக்கத்தான் பேரணி சென்றனர்.