Also Watch
Read this
By: Web Team

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, உதவி பொறியாளரை தாக்கிய திமுக வட்டச் செயலாளரை போலீஸார் தேடி வருகின்றனர். பூண்டி தங்கம்மாள் தெருவில் இருந்த மீனவர் குடியிருப்பு இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டு வருகிறது. மேலும், இக்குடியிருப்பை சுற்றி சுற்றுச்சுவர் கட்டும் பணிக்காக, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், 39-ஆவது வார்டு திமுக வட்டச் செயலாளர் கஜேந்திரன், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, சுற்றுச்சுவர் கட்டும் பணியை நிறுத்துமாறு கூறி, உதவி பொறியாளர் அரவிந்த்தை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved