Also Watch
Read this
By: Web Team

கோவையில், தென்னை மரங்களை சூறையாடிய காட்டு யானைக் கூட்டத்தால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ஆனைமலை அருகே அங்கலக்குறிச்சி நரி முடக்கு வனப்பகுதியை ஒட்டி ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு அவ்வப்போது காட்டுப் பன்றிகள், யானைகள் முகாமிடுவதால், வனத்துறை அனுமதியுடன் விவசாயிகள் தங்கள் தோட்டங்களை சுற்றி மின்வேலி அமைத்துள்ளனர்.
இந்தநிலையில், யானைக் கூட்டம் செந்தில் என்பவரது தோட்டத்துக்குள் புகுந்து அங்கு 30க்கும் மேற்பட்ட தென்னை மரங்களின் குருத்துக்களை ஒடித்து சாப்பிட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள் வராத வண்ணம் வனத்துறையினர் சுழற்சி முறையில் கண்காணிக்க வேண்டும், தென்னை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved