Also Watch
Read this
By: Fyrose Banu

தாளவாடி அருகே ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட பையனபுரம் கிராமத்தில் மல்லப்பா என்பவருக்கு சொந்தமான முட்டைக்கோஸ் தோட்டத்துக்குள் நேற்று இரவு புகுந்த காட்டு யானைகள் முட்டைக்கோஸ் பயிர்களை தின்றும் மிதித்தும் சேதம் செய்துள்ளன. அறுவடைக்கு சில நாட்களே உள்ள நிலையில் முட்டைகோஸ்கள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சேதம் அடைந்த முட்டைக்கோஸ் பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், யானைகள் விவசாய நிலங்களில் நுழைவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved