Also Watch
Read this
By: Manigandan Raja

செயல் அதிகாரி கைது :
ஹரியானா மாநிலம் குருகிராமில் 500 கோடி ரூபாய் மோசடி வழக்கில் 32வது அவென்யூ நிறுவன தலைமைச் செயல் அதிகாரி துருவ் தத் சர்மா கைது செய்யப்பட்டார் .
வணிக ரியல் எஸ்டேட் திட்டமான 32வது அவென்யூவின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான துருவ் தத் சர்மா, ஒரே வணிக யூனிட்டை நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்களுக்கு விற்று அவர்களை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
முதலீட்டாளர்களிடமிருந்து பெற்ற பணத்தில் துருவ் தத் சர்மா கோவாவில் ஆடம்பர பங்களா மற்றும் ராஜஸ்தானில் சொத்துக்களை வாங்கியுள்ளதை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved