Also Watch
Read this
By: Web Team

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேர் செல்லவிருந்த விண்வெளிப் பயணம் தேதி எதுவும் குறிப்பிடப்படாமல் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.
ஆக்சியம் -4 திட்டத்தின் மூலம் இந்தியாவை சேர்ந்த சுபன்ஷு சுக்லா, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பெக்கி விட்சன் ஆகியோர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு கடந்த 19ஆம் தேதி செல்ல திட்டமிடப்பட்டு, பின் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
தற்போது மீண்டும் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், ஜூன் 30ஆம் தேதிக்குள் விண்வெளி பயணம் செல்லா விட்டால், ஜூலை மாத மத்தியில் செல்ல திட்டமிடக்கூடும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் : டோர்னியர் 228 ரக விமானத்தின் மீது லேசர் லைட் அடிப்பு..
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved