Also Watch
Read this
By: Web Team

மத்தியபிரதேசத்தில் உயிரிழந்தவரின் உடலை குப்பை வண்டியில் மருத்துவமனை நிர்வாகம் அனுப்பி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Damoh மாவட்டத்தில் கொலை செய்யப்பட்ட நபரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவரின் உடலை கொண்டு செல்ல உறவினர்கள் அமரர் ஊர்தி கேட்டும் கொடுக்காமல், மாறாக குப்பை அள்ளுவதற்காக பயன்படுத்தப்பட்ட வாகனத்தை வழங்கியுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர் கதையாகி வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved