Also Watch
Read this
By: Web Team

தமது தாயார் மீது ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் சுமத்திய அவப்பெயர் நாட்டில் உள்ள அனைத்து தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களுக்கும் ஏற்பட்ட அவமதிப்பு என பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் பீகாரில் நடந்த வாக்காளர் அதிகார பயண பொதுக்கூட்டத்தில் வைத்து காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி தொண்டர்கள், மோடியை குறித்தும் காலமான அவரது தாயார் குறித்தும் ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர், மரபுகளுக்கு பெயர் போன பீகாரில் இப்படி நடக்கும் என தாம் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு எந்த தொடர்பும் இல்லாத தமது தாயாரை குறித்து இப்படி அவதூறு பேசுவது தமக்கு மிகுந்த சோகத்தையும், வேதனையையும் ஏற்படுத்தி விட்டதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.