Also Watch
Read this
By: Web Team

வீட்டு பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், மதசார்பற்ற ஜனதா தள முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஆபாச வீடியோக்களை வைத்திருந்த இவர் மீது நான்கு பாலியல் பலாத்கார வழக்குகள் பதியப்பட்டது. ஹசன் மாவட்டத்தில் உற்ற ஹோல்நரசிபுராவில் உள்ள பண்ணை வீட்டில் வைத்து அவர் இந்த குற்றங்களை செய்த தாக கடந்த ஆண்டு வழக்கு பதியப்பட்டது.
இது தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவரை குற்றவாளி என அறிவித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தற்போது தண்டனையை அறிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved