Also Watch
Read this
By: Web Team

புதுச்சேரியில் புதிதாக விண்ணப்பித்த 10 ஆயிரம் பேருக்கு அடுத்த மாதத்தில் முதியோர் உதவித்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
புதுச்சேரி அரசு, ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டாக்களை வழங்கிய பின் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி இதனை கூறினார்.
ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தும் போது மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து அந்த திட்டத்தை செயல்படுத்தும் அரசாகத்தான் திகழ்வதாக கூறியவர் எந்த மாநிலத்திலும் சிறப்புகூறு நிதி தனியாக ஒதுக்கப்படவில்லை. ஆனால் புதுச்சேரி அரசு ஒதுக்கியுள்ளதாக கூறியவர் அறிவித்த அத்தனை திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்றார்.