Also Watch
Read this
By: Manigandan Raja

முக்கிய சாலைகளில் குளம் போல் மழை நீர் தேங்கியது :
மகராஷ்டிரா மாநிலம் மும்பையின் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் முக்கிய சாலைகளில் குளம் போல் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளித்தது. நவி மும்பையின் வாஷி பகுதியில் உள்ள தெருக்கள், அந்தேரி சுரங்கப்பாதை, விலே பார்லே மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலியான சோகம் :
உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் (( Saharanpur )) தேசிய நெடுஞ்சாலையில் பின்னால் வந்துக் கொண்டிருந்த கார் மீது அதிவேகமாக வந்த மற்றொரு கார் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினர்.

டெல்லி - டேராடூன் விரைவுச் சாலையில் சர்வீஸ் சாலையில் செல்வதற்காக கார் ஒன்று பின் நோக்கி வந்துக் கொண்டிருந்தது. அப்போது அதிவேகமாக வந்த மற்றொரு கார் மோதியதில் இரண்டு வாகனமும் பலத்த சேதமடைந்தது.