Also Watch
Read this
By: Manigandan Raja

கோரிக்கையை ஏற்று தங்கம் வாங்காமல் இருந்ததற்காக நன்றி :
மேற்காசிய போர் காரணமாக தாம் விடுத்த கோரிக்கையை ஏற்று தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில், நாட்டு மக்கள் தனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டதோடு மட்டுமின்றி, அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு அளித்ததாக கூறினார்.
ராமர் கோவில் நன்கொடை பணம் திருட்டு வழக்கு :

அயோத்தி ராமர் கோவில் உண்டியல் காணிக்கை மற்றும் நன்கொடை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தது விசாரணையில் தெரியவந்தது. இதில் மூளையாக செயல்பட்ட அனுகல்ப் மிஸ்ரா, அவரது உறவினர் லவகுஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் பணத்தைக் கொண்டு சொகுசு பண்ணை வீடு மற்றும் ஸ்கார்பியோ கார் வாங்கியது எஸ்ஐடி விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
விஷ மாத்திரைகள் கொடுத்தவரை பிடித்து விசாரணை :

மும்பையில் நடைபெற்ற மொஹரம் ஊர்வலத்தின்போது, விஷ மாத்திரைகளை கொடுத்து 15 ஆயிரம் பேரை கொலை செய்ய முயன்ற சம்பவம் அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பைகுல்லா பகுதியில் ஊர்வலத்தின் போது வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், அதனை விநியோகித்தவரை பிடித்து போலீஸ் விசாரித்த பகீர் உண்மை தெரிந்தது.