Also Watch
Read this
By: Web Team

போரை நிறுத்த உதவுமாறு இந்தியா அமெரிக்கா அதிபர் டிரம்பிடம் ஒரு போதும் கேட்டதில்லை என எம்பி குழு தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
அவரது தலைமையிலான குழு பிரேசில் பயணத்தை முடித்துள்ள நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேண்டுமானால் போரை நிறுத்த உதவுமாறு பாகிஸ்தான் தரப்பில் இருந்து டிரம்பிடம் கோரிக்கை வைத்திருக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்தார்.
டிரம்ப் மீது இந்தியா அபரிதமான மரியாதை வைத்துள்ளது என்ற அவர் அதே சமயம் பல விவகாரங்களில் இந்தியாவின் புரிதல் டிரம்பிடம் இருந்து மாறுபட்டது எனவும் கூறினார்.