Also Watch
Read this
By: Web Team

ஈரானின் மீது அமெரிக்கா நேரடியாக தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக இந்திய பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிந்து 81 ஆயிரத்து 560 புள்ளிகளில் வர்த்தகத்தை துவங்கியது.
அதேபோல், தேசிய பங்குசந்தை குறியீடான நிஃப்டி 250 புள்ளிகள் சரிந்து 24 ஆயிரத்து 859 புள்ளிகளில் வர்த்தகத்தை துவங்கியது.
இதனிடையே, வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதற்கு ஈரான் முடிவு செய்துள்ளதாக கூறப்படுவதால், கச்சா எண்ணெய் விலை 2 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
இதையும் படியுங்கள் : அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை..
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved