Also Watch
Read this
By: Web Team

மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் ஆளுநர் காலம் தாழ்த்துவதை எதிர்த்து தாக்கல் செய்திருந்த இரண்டு மனுக்களை வாபஸ் பெற கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஒப்புதல் வழங்கியது.
நீதிபதி பிஎஸ் நரசிம்மா தலைமையிலான அமர்வு முன்பாக இன்று நடந்த விசாரணையில், இதை போன்ற வழக்கில் தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளதால், கேரள அரசு தனது மனுக்களை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.
மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவருக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் எட்டாம் தேதி தீர்ப்பு வழங்கியது.