Also Watch
Read this
By: Web Team

மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தால் மகாராஷ்டிரா முழுவதும் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய மோட்டார் வர்த்தக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
சமூக ஆர்வலர் மனோஜ் ஜாரங்கி மற்றும் அவரது ஆதவரவாளர்கள் நடத்தி வரும் இந்த போராட்டத்தால் அனைத்து சாலைகளும் போக்குவரத்து நெரிசலால் நிரம்பி வழிந்தன.
குறிப்பாக தெற்கு மும்பைக்கான அனைத்து முக்கிய இணைப்பு வழித்தடங்களிலும் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், அவை துறைமுகத்திற்கு உரிய நேரத்திற்கு செல்ல முடியவில்லை என்றும் அதனால் சரக்கு போக்குவரது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக AIMTC தெரிவித்துள்ளது.