Also Watch
Read this
By: Web Team

பாலிவுட் நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் தொடர்புடைய 5ஆவது நபரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். கடந்த 12ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள திஷா பதானியின் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில், துப்பாக்கிச்சூட்டிற்கு கோல்டி பிரார் கேங் பொறுப்பேற்பதாக அறிவித்தது. இதனால் இந்த வழக்கு விசாரணையில் தீவிரமாக இறங்கிய போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்திய இருவரை கடந்த புதன்கிழமை என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர். மேலும் இரண்டு சிறார்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது 5ஆவது நபரை பரேலியில் சுட்டுப்பிடித்தனர்...
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved