Also Watch
Read this
By: Web Team

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கலவரம் நடந்து இரண்டு ஆண்டுகளான நிலையில், பிரதமர் மோடி முதன்முறையாக, வரும் 13ல் அங்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மணிப்பூரில், குகி - மெய்தி பிரிவினரிடையே இட ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், மிசோரமில், பைராபி- - சாய்ராங் இடையே, 51புள்ளி 38 கிலோ மீட்டர் துாரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதை திட்டத்தை துவக்கி வைக்க, பிரதமர் மோடி வரும் 13ல் மிசோரம் செல்கிறார். கலவரம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின் பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்ல இருப்பது கவனம் பெற்றுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved