Also Watch
Read this
By: Web Team

ஐபிஎல் கோப்பையை வென்ற பெங்களூரு அணியின் வெற்றி விழா கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
2025 ஐபிஎல் கோப்பையை RCB அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அந்த அணியை பாராட்டும் விதமாக கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வெற்றி விழா கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்ததை விட ரசிகர்கள் பட்டாளம் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இக்கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் உயிரிழந்த நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.