Also Watch
Read this
By: Manigandan Raja

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் வாபஸ்
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, டெல்லி ஜந்தர்மந்தரில் அமைக்கப்பட்டிருந்த போராட்டப் பந்தல் அகற்றப்பட்டது. மேலும் போராட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்த குப்பைகளை, தன்னார்வலர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து சுத்தம் செய்தனர். இது தொடர்பான காட்சி வெளியாகியுள்ளது.
அமைதியான முறையில் போராட விரும்பும் மக்கள்

டெல்லியில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்து தங்களுக்கு தெரியும் என ஐ.நா கூறியுள்ளது. அமைதியான முறையில் போராட விரும்புவோர் துன்புறுத்தல், கைது போன்ற அச்சமின்றி அவர்கள் அனுமதிக்கப்படுவது முக்கியம் என்றும், அந்த உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது பாதுகாப்புப் படையினரின் கடமை என்றும், ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தி தொடர்பாளர், ஸ்டீபன் தெரிவித்தார்.