Also Watch
Read this
Posted on: Mar 23, 2026 01:48 PM
By: Manigandan Raja

மெலனிஸ்டிக் புலித்தோல் பறிமுதல் :
ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள சிமிலிபால் புலிகள் காப்பக அதிகாரிகள், அரிதான மெலனிஸ்டிக் ((Melanistic)) புலி ஒன்றின் தோலை பறிமுதல் செய்து, இது தொடர்பாக 12 பேரைக் கைது செய்துள்ளனர்.
இந்திய காடுகளில் வேறு எங்கும் காணப்படாத, கருப்பு புலி என்று அழைக்கப்படும் மெலனிஸ்டிக் புலிகள், சிமிலிபால் ((Similipal)) காப்பகத்தில் மட்டுமே வசிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 13 புலிகள் இருந்த நிலையில் ஒரு புலி வேட்டையாடப்பட்டுள்ள நிலையில் அடுத்து, இதுபோன்ற வேட்டைகள், பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் பாதுகாப்பு முயற்சிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved