Also Watch
Read this
By: Manigandan Raja

பிரதமர் நரேந்திர மோடி தகவல் :
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் சூழலுக்கு நடுவே, இந்தியாவில் 53 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு ஆசிய போர் நிலவரம், அதனால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள்.
அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மக்களவையில் உரையாற்றிய மோடி, போர் உள்ளிட்ட நெருக்கடி கால தேவைக்காக கடந்த 10 ஆண்டுகளில் கச்சா எண்ணெயை சேமித்து வைப்பதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்துள்ளதாக குறிப்பிட்டார்.
முன்னதாக 27 நாடுகளில் இருந்து மட்டுமே எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 41 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதாகவும், இந்த பரவலாக்கத்தின் மூலம் விநியோகம் பாதிக்கும் தன்மை குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved