Also Watch
Read this
By: Web Team

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சர்ஜாபூரில் உள்ள விப்ரோ நிறுவனத்தின் வளாக சாலையை பொதுபோக்குவரத்துக்கு திறக்க கோரி அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கடிதம் எழுதியிருந்த நிலையில் அதற்கு விப்ரோ நிறுவனர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தாங்கள் சர்ஜாபூர் வளாகத்தை சிறப்பு பொருளாதார மண்டலாக வைத்துள்ளதாக தெரிவித்த விப்ரோ நிறுவனர் ஆசிம் பிரேம்ஜி, இது நிறுவனத்திற்குச் சொந்தமான பிரத்யேக தனியார் சொத்து என்றார். மேலும், தனியார் சொத்துக்கள் வழியாக பொது வாகன இயக்கம் என்பது ஒரு நிலையான மற்றும் நீண்டகால பயனுள்ள தீர்வாக இருக்காது எனவும் பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved