Also Watch
Read this
By: Web Team

பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் ஏவல் படையாக அமலாக்கத் துறை செயல்படுவதாக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலே குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கடந்த 10 ஆண்டுகளில் அமலாக்கத் துறை 5892 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அதில் வெறும் 1398 வழக்குகள் மட்டுமே நீதிமன்றத்தில் விசாரணைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாகவும், அப்படியானால், 10 ஆண்டுகளில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்குகளில் 77 சதவிகித வழக்குகள் உரிய ஆதாரங்கள் இல்லாததினால் நீதிமன்ற விசாரணைக்குக் கொண்டு செல்லப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் பதிவு செய்யப்பட்ட 5892 வழக்குகளில், வெறும் 8 வழக்குகளில் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சாகேத் கோகலே குறிப்பிட்டுள்ளார்.