Also Watch
Read this
By: Web Team

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்சில் பாதுகாப்புப் படையினரால் 2 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பூஞ்சின் தேக்வார் செக்டாரில் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) இருந்து ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்த அதிகாரிகள், மேலும் தேடுதல் வேட்டை தொடர்வதாக தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved