Also Watch
Read this
By: Web Team

மணிப்பூர் மாநிலத்தில் அசாம் ரைபிள்ஸ் படை வீரர்கள் சென்ற ராணுவ வாகனத்தின் மீது சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இம்பால் மாவட்டத்தில் இருந்து பிஷ்னுபூர் மாவட்டத்திற்கு சென்றுக் கொண்டிருந்த போது, நம்பால் சபல் லைகாய் ((Nambol Sabal Leikai)) எனும் இடத்தில் சிலர் வாகனத்தை வழிமறித்தனர்.
வீரர்கள் சுதாரிப்பதற்குள் அவர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சென்ற ராணுவ வீரர்கள், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததோடு, தப்பியோடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : ஒருநாள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார் பிரதமர் ரூ.34,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்