Also Watch
Read this
By: Web Team

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்த 15 நாட்களுக்குள் புகைப்பட அடையாள அட்டையை பெறுவதற்கான புதிய வழிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, வாக்காளர் அடையாள அட்டைக்கான செயலாக்கம் முதல் தபால் துறையின் மூலம் வாக்காளரிடம் வழங்கப்படுவது வரை ஒவ்வொரு கட்டமும் நேரடியாக கண்காணிக்கப்படும் எனவும், குறுஞ்செய்தி வாயிலாக தகவல்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் அட்டையை புதிதாக பெறுதல் அல்லது ஏற்கனவே உள்ள விவரங்களில் திருத்தம் செய்தல் உள்ளிட்டவை இதில் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் :"டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கிடுக!"
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved