Also Watch
Read this
By: Web Team

சவுதி அரேபியா நாட்டின் ஜித்தாவில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு வந்த விமானத்தில் தங்கத்தை கடத்தி வந்த இளைஞரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளை சோதனை செய்தபோது, மலப்புரம் பகுதியை சேர்ந்த பஷீர் ரஹ்மான் இருபாதங்களுக்கு அடியிலும் தங்கத்தை மறைத்து வைத்து, ஷூ அணிந்து கொண்டு வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 843 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்ததாக சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.