Also Watch
Read this
By: Web Team

வெனிசுலாவில் அடுத்தடுத்த பலரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதால் இன்னும் பலி எண்ணிக்கை உயருமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் ஒரு நிமிட இடைவெளியில் டிக்டர் அளவில் 7.2, 7.5 என அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. அதோடு நிற்காமல் தொடர்ந்து 30 முறை நில அதிர்வு உணரப்பட்டதால், 100 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு ஒரு பயங்கரமான சம்பவமாகவே பார்க்கப்படுகிறது.
இதற்கிடையேர்னிசுலாவின் தலைநகரான காராகஸ்ல் லா குவைரா பகுதிகள் நிலநடுக்கத்தால் பேரழிவை சந்தித்துள்ளன. சீட்டுக் கட்டை போல் பல அடுக்குமாடி குடியிருப்புகள் சரிந்து தரைமட்டமாகின. சில இடங்களும் மின் கம்பங்களும், மரங்களும் முறிந்து விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தின.

நிலநடுக்கத்தின் போது வீடுகள் குலுங்கியதுடன், சாலையில் பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்தை துண்டித்தன. அச்சத்தின் நடுங்கிய பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். பெரிய கட்டிடங்களூம், குடியிருப்புகளும் இடிந்து விழுந்ததால், அமெரிக்கா, கியூபா, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மீன்பு குழுவினர் மீட்பு பணிக்காக வெனிசுலா விரைந்தனர்.

இந்த கொடூரமான பேரழிவால் 11 ஆயிரம் பேர் காணாமல் போனதாகவும், இதுவரை 188 பேர் உயிரிழந்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 100 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இப்படி ஒரு பேரழிவு ஏற்பட்டுள்ளதால், அதிலிருந்து வெனிசுலா மீண்டு வர சில நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.