Also Watch
Read this
By: Manigandan Raja
வியட்நாம் படகுவிபத்து

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்களின் உடல்களும் தமிழகம் வந்து சேர்ந்தது. முருகபிரபு, செந்தில்குமார், ஸ்ரீதர் ஆகியோரின் உடல்கள், கோவை வந்தடைந்தது கோவை விமான நிலையத்திற்கு 6 உடல்கள் கொண்டு வரப்பட்டன. சென்னை விமான நிலையத்திற்கு 4 உடல்கள் ஏற்கனவே கொண்டு வரப்பட்டன.

லாவா நிறுவனம் அறிவிப்பு

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என லாவா நிறுவனம் அறிவித்து உள்ளது. விபத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் 'லாவா' செல்போன் நிறுவனத்தின் விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சோகத்தில் மூழ்கிய கிராமம்
வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த வினயகுமாரின் உடல் அவரது சொந்த ஊரான வேலூர் சைதாப்பேட்டைக்கு கொண்டு செல்லப்பட்டது; வினயகுமாரின் மரணத்தால் சோகத்தில் மூழ்கிய கிராமத்தினர், கண்ணீர் விட்டனர்.
சென்னை விமானநிலையம்
வியட்நாமில் உயிரிழந்த 2 பேரின் உடல்கள் சென்னை விமானநிலையம் வந்தடைந்தன; இருவரின் உடல்களும் சொந்த ஊர்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது சென்னையை சேர்ந்த சந்தோஷ், கும்மிடிபூண்டியை சேர்ந்த பாபுவின் உடல்கள் வந்தடைந்தன.