Also Watch
Read this

இந்திய அணியின் தொடர் தோல்வி காரணமாக டி20 கேப்டன் ஸ்ரேயாஸ் அயர், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் பதவியில் நீடிப்பது கேள்விக்குறியாகி உள்ளது.

மதிப்பீடு செய்ய ஆணை
நடப்பு டி20 சாம்பியனான இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களை அடுத்தடுத்து இழந்து சொதப்பி வருவது பேசுபொருளாக மாறியுள்ளது. இதனால் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் செயல்பாடு குறித்து மதிப்பீடு செய்ய பிசிசிஐ உத்தரவிட்டு உள்ளது. அதேபோல் தலைமை பயிற்சியாளர் கம்பீரின் பதவிக்காலம் 2027ஆம் ஆண்டு வரை இருந்தாலும், அது குறித்து மறு ஆய்வு செய்யவும் முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தோல்வி குறித்து ஆராய பிசிசிஐ முடிவு
மேலும், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடரில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்த நிலையில், தோல்வி குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இங்கிலாந்து சுற்றுப் பயணத்துக்குப் பின் அணியின் செயல்பாடுகள் தீவிர ஆய்வுக்குட்படுத்தப்படும் என பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சாய்கியா(Devajit Saikia) தெரிவித்துள்ளார். இந்தியா, இங்கிலாந்து தொடரில் இந்திய அணி மோசமான கால கட்டத்தை கடந்து வந்ததாகவும் அவர் கருத்து தெரிவித்தார்.

300 சர்வதேச போட்டிகளில் விளையாடிய 12ஆவது வீராங்கனை
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா, 300 சர்வதேச போட்டிகளில் விளையாடிய உலகின் 12ஆவது வீராங்கனை என்ற புதிய சாதனை படைத்தார். இந்தியாவில், முன்னதாக மிதாலி ராஜ், ஹர்மன் ப்ரீத் கவுர் ஆகியோர் இந்த சாதனையை படைத்திருந்தனர். லண்டனில் நடைபெற்று வரும் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் பங்கேற்றதன் மூலம் ஸ்மிரிதி மந்தனா இந்த சாதனையை படைத்துள்ளார்.