Also Watch
Read this
By: Web Team

இசையமைப்பாளர் இளையராஜா, தாய் மூகாம்பிகை கோயிலுக்கு வைர கிரீடம் வழங்கி, சாமி தரிசனம் செய்தார்.
கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லூர் மூகாம்பிகைக்கு 4 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர கிரீடத்தை வழங்கினார் இசையமைப்பாளர் இளையராஜா.

கொல்லூர் மூகாம்பிகையின் தீவிர பக்தரான இளையராஜா, பல்வேறு வகையான ஆபரணங்களால், மூகாம்பிகையை அலங்கரித்து மகிழ்வித்து வருகிறார்.
இந்த முறை, வைர கிரீடம் மற்றும் ஆபரணங்களுடன், வீரபத்திரருக்கு வெள்ளி கிரீடம் மற்றும் வாள் காணிக்கையாக வழங்கப்பட்டது.
இந்த ஆபரணங்கள் காணிக்கையாக வழங்கப்படுவதற்கு முன்பு, ஊர்வலம் நடைபெற்றது.

கோயில் நிர்வாகக் குழுவும், அர்ச்சகர்களும் ஊர்வலத்தில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்களும், கிராம மக்களும் கலந்து கொண்டனர்.