Also Watch
Read this
By: Manigandan Raja
ஈரானின் ராணுவம், கடற்படை, முக்கிய தலைவர்கள் என அனைத்தையும் அழித்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பெருமிதம் தெரிவித்தார். ஈரான் வசம் இருந்த 32 போர் கப்பல்களும் கடலில் மூழ்கி விட்டதாகவும் கூறி உள்ளார்.

கடந்த 72 மணி நேரத்தில்...
ஈரான் கடற்படையின் ட்ரோன் ஏவும் கப்பல் உட்பட 30க்கும் மேற்பட்ட கப்பல்களை தகர்த்ததாகவும், கடந்த 72 மணி நேரத்தில் ஈரானில் 200 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க ராணுவ கமாண்டர் அட்மிரல் பிராட் கூபர் US military commander Admiral Brad Cooper, பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்சேத் ஆகியோர் புளோரிடாவில் கூறியதாவது;
ஈரான் கடற்படையை ஒட்டு மொத்தமாக அழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்க படைகள் ஈடுபட்டுள்ளன. ஈரானின் மிகப் பெரிய ட்ரோன் ஏவும் போர்க்கப்பலை தகர்த்தோம். அது தற்போது எரிந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியதில் இருந்து இதுவரை 30க்கும் மேற்பட்ட ஈரான் போர்க் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

தாக்குதல் தீவிரமாகும்
கடந்த 72 மணி நேரத்தில், ஈரானின் சுமார் 200 இலக்குகள் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. பூமிக்கு அடியில் ஈரான் அமைத்துள்ள ஏவுகணை தளங்கள் மீது, அமெரிக்காவின் பி-2 குண்டு வீச்சு விமானங்கள் 2,000 பவுண்ட் எடையுள்ள பல குண்டுகளை போட்டுள்ளன. இதன் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் 90 சதவீதம் குறைந்துள்ளது, ட்ரோன் தாக்குதல் 83 சதவீதம் குறைந்துள்ளது. வரும் நாட்களில் ஈரான் மீதான விமான தாக்குதல் தீவிரமடையும்.
இவ்வாறு பிராட் கூபர், பீட் ஹெக்சேத் தெரிவித்தனர்.

ஈரானில் ராணுவத்தை இறக்குவது...
ஈரானில் அமெரிக்க ராணுவ வீரர்களை இறக்கினால் பேரழிவாக இருக்கும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறுகையில், ‘‘ஈரானில் ராணுவத்தை இறக்குவது நேரத்தை வீணடிப்பது போன்றது’’ என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved