Also Watch
Read this
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டேன் என நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அறிவித்து உள்ளார்.

திருச்சி கிழக்கில் போட்டி இல்லை
இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள ராகவா லாரன்ஸ் கூறி இருப்பதாவது;
ஆசைக்காக அரசியலுக்கு வர மாட்டேன், மக்களுக்காக தான் அரசியலுக்கு வருவேன். திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்.

வேறு மாதிரியான தகவல்...
அரசியலுக்கு வருகிறேன் என்ற உடன் வேறு மாதிரி சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இது குறித்து எனது தாயார் உள்பட நண்பர்கள், உறவினர்கள் என பலரும் என்னிடம் கேள்வி கேட்டார்கள்.

வேறு தொகுதியில் போட்டி...
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், வேறு தொகுதியில் போட்டியிடப்போவது இல்லை என்று கூறவில்லை.
இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறினார்.