Also Watch
Read this
By: Web Team

எதிர்பார்ப்புகளற்ற அன்பும், விட்டுக் கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும் என்று, தனது 50ஆவது திருமண நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைய தலைமுறையினருக்கு அறிவுறுத்திஉள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டபதிவு:
அரை நூற்றாண்டாக என் வாழ்வின் துணையாக, என்னில் பாதியாக துர்கா அவர்கள் நுழைந்து, தன்னுடைய அன்பால், மண வாழ்வை மன நிறைவான வாழ்க்கையாக அளித்துள்ளார். அவர் மீதான அளவற்ற அன்பே என் நன்றி.
எதிர்பார்ப்புகளற்ற அன்பும், விட்டுக் கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும் என, இளைய தலைமுறையினருக்குச் சொல்லிக் கொள்கிறோம். வீடும் நாடும் போற்றும் வாழ்வை அனைவரும் வாழ்ந்திட விழைகிறோம்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved